ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நேற்றுடன் நிறைவடைந்தது…

104
Advertisement

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜி ஸ்கொயர் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது.

ஜி ஸ்கொயர் நிறுவனம் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை இழப்பில் இயங்கியதாக கணக்கு காட்டப்பட்டுள்ள நிலையில், புதிய முதலீடுகளுக்கு கடந்த 2 ஆண்டுகளில் பணம் கிடைத்தது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக கூறப்பட்டது. அதிக அளவிலான நிலங்களை ஒரே நேரத்தில் கையகப்படுத்தியதாகவும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இதையடுத்து, கடந்த 24 ஆம் தேதி சென்னை, திருச்சி, கோவை உட்பட தமிழ்நாட்டில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு தொடர்புடைய 50க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.  கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் வருமான வரிசோதனை நடைபெற்றது. இந்நிலையில் 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நேற்றுடன் நிறைவடைந்தது.