கர்நாடக சட்டமன்ற தேர்தலில், பழைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாக காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு, இந்திய தலைமை தேர்தல் ஆணையம மறுப்பு தெரிவித்துள்ளது….

117
Advertisement

கர்நாடக சட்டப்பேரவைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் தேர்தல் குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், தென் ஆப்பிரிக்கா தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள், சோதனை செய்யப்படாமல் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது என்றும், இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள தேர்தல் ஆணையம், தென் ஆப்பிரிக்காவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா தயாரித்த, புதிய வாக்குப்பதிவு இயந்திரங்களே பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.