Advertisement
இந்திய ரிசர்வ் வங்கி 2022-23 ஆம் நிதியாண்டின் முடிவில் அதிக கடன் பெற்ற மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி 87 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக பெற்று, அதிக கடன் பெற்ற மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2021-22 ஆம் ஆண்டிலும் இந்த பட்டியலில் தமிழகமே முதலிடத்தில் இருந்தது. 72 ஆயிரம் கோடி ரூபாய் கடனுடன்,
மகாராஷ்டிரா 2ஆம் இடத்திலும், 63 ஆயிரம் கோடி ரூபாய் கடனுடன் மேற்கு வங்கம் 3வது இடத்திலும் உள்ளன. ஆந்திரா, உத்தரபிரதேசம் ஆகியவை அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.