தொடர்ந்து 57 கிலோ மீட்டர் நீச்சல் அடித்து சாதனை படைத்த சிறுவன்

409
Advertisement

தேனி மாவட்டத்தை 14 வயது சினேகன், தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கும் பின் அங்கிருந்து மீண்டும் தனுஷ்கோடிக்கும் இடையேயான கடல் பகுதியில் இடைவிடாமல் 57 கிலோமீட்டர் நீத்தியுள்ளார்.

இந்த சாதனையை நிகழ்த்த நேற்று மதியம் 1 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு வந்தார். சுங்கத்துறை மற்றும் துறைமுக குடியுரிமை அதிகாரிகள் சோதனைக்கு பின்னர் 2 மணிக்கு சினேகன் அரிச்சல்முனை கடல் பகுதியில் இருந்து தலைமன்னார் நோக்கி நீந்தத் தொடங்கினார். பின்னர் மாலை 5.15-க்கு இந்திய கடல் எல்லையை கடந்து இலங்கை கடல் பகுதியை நோக்கி நீந்தினார்.

இரவு தலைமன்னார் பகுதிக்கு சென்ற சினேகன் மீண்டும் தலைமன்னார் பகுதியில் இருந்து நீந்தி தனுஷ்கோடி வந்தடைந்தார். மொத்தம் 57 கிலோமீட்டர் தூரத்தை 14 வயது சிறுவன் இடைவிடாமல் நீத்தி சாதனை படைத்துள்ளது பலரையும் புருவம் உயர்த்தவைத்துள்ளது.