புனேவில் போர் விமானம் தரையிறங்கும் போது டயர் வெடித்தது…விமானங்கள் தாமதம்

484
Advertisement

புனே சர்வதேச விமான நிலையத்தில், சுகோய் போர் விமானம் தரையிறங்கும் போது அதன் டயர் வெடித்தது. இந்த விபத்தால் பெரிய சேதம் ஏற்படவில்லை என்றாலும், விமான ஓடுதளம் 2 மணி நேரம் மூடப்பட்டது. இதன் காரணமாக புனே விமான நிலையத்தில் தரைஇறங்கவேண்டிய விமானங்கள் மும்பைக்கு திருப்பி விடப்பட்டன. அதேபோல், விமானம் புறப்பாடும் பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர். விமான ஓடுதளம் சீர் செய்யப்பட்டதையடுத்து, விமான சேவை சீரானது.