மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் ஸ்பைஸ்ஜெட்

277

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை நீட்டித்து விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானங்கள் அண்மை காலமாக தொடர்ந்து தொழில் நுட்ப கோளாறுகளுக்கு உள்ளாகி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் நடுவானில் ஏற்படும் கோளாறுகள் காரணமாக ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் பலமுறை பாதியில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டன.

இதை தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு DGCA நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அளித்த பதிலின் அடிப்படையில், 8 வாரங்களுக்கு 50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என கடந்த ஜூலை 27ஆம் தேதி DGCA உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் இந்த உத்தரவை அக்டோபர் 29ஆம் தேதி நீட்டித்து விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது