தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கத்தியால் தாக்கி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

129
Advertisement

பென்னாகரம் அருகே உள்ள அளேபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ்-பிரியா தம்பதிக்கு இடையே அடிக்கடி  தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மதுபோதையில் வீட்டுக்கு வந்த தங்கராஜ், மனைவி பிரியாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு வழக்கம்போல் சண்டை போட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த தங்கராஜ், கத்தியால் மனைவி பிரியாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கணவன் தங்கராஜை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.