மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் வங்கிக்கடன் வழங்கும் சிறப்பு முகாம் கிண்டியில் நாளை நடக்கிறது

429
Advertisement

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் செய்திட வங்கிக்கடன் வழங்கும் சிறப்பு முகாம் நாளை (மார்ச் 10 )காலை 10 மணி முதல் மதியம்1 மணி வரை கிண்டியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்க்கை மேம்பாடு சேவை மையத்தில் நடைபெற உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் மானியத்துடன் 25 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கிட வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வட்டி இல்லா கடன் தரவும் , மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைப்பதற்கு 50 ஆயிரம் மானியம் வழங்க பரிந்துரை செய்யப்பட உள்ளது.மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 5 லட்சம் வரை வங்கிக்கடனும் வழங்கப்பட பரிந்துரை கடிதம் வழங்கப்படும்.

சென்னை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன், மருத்துவ சான்றிதழ் ,ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் ஆகியவற்றுடன் சிறப்பு முகாமிற்கு நேரில் வந்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.