“சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”

334

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெங்ஷங்கருக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில், இரண்டு மாத மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு கடந்த 3ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த12 மீனவர்கள் தங்கள் பாரம்பரிய கடற்பகுதிக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி உள்ளார்.

இலங்கைகடற்படையின் இந்த நடவடிக்கையால் மீனவர்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக ஓ.பனீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

பாரம்பிரய கடற்பரப்பில் மீன் பிடிப்பதை தடுக்கும் இலங்கை கடற்படையின் நோக்கம் மிகவும் கண்டிக்கத்தது என்று தெரிவித்துள்ள ஓ.பன்னீல்செல்வம், தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களையும், அவர்களது இயந்திர படகுகளையும்  இலங்கை அரசு விடுவிப்பதை, மத்திய அரசு  உறுதி செய்யுமாறு அந்த கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.