கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: கைதான 5 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

237

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைதான 5 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மாணவி மரண வழக்கில், தனியார் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் மற்றும் கணித ஆசிரியைகள் ஹரி பிரியா, கிருத்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலின் அடைக்க மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது