வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, நாகை, புதுச்சேரி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது….

173
Advertisement

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 11ஆம் தேதி காலை அதிதிவிர புயலாகவும், அன்றைய தினம் மாலையில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடலில் மிகக் கடுமையான புயலாகவும் மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் மீண்டு வடகிழக்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே, 14ஆம் தேதி கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புயல் சின்னம் காரணமாக, சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.