தெலங்கானாவில், மாணவிகளுக்கு மின்சார ஸ்கூட்டரும், இளைஞர்களுக்கு 10 லட்சம் ரூபாயும் வட்டியில்லா கடனாக வழங்குவோம் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது….

72
Advertisement

தெலங்கானாவில் இந்தாண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெலங்கானா சென்றுள்ள நிலையில், அவரது முன்னிலையில் ‘ஐதராபாத் இளைஞர் பிரகடனம்’ என்ற பெயரில் இளைஞர்களுக்கான தேர்தல் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 18 வயது பூர்த்தி அடைந்த மாணவிகளுக்கு மின்சார ஸ்கூட்டர் வழங்கப்படும் என்றும் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 10 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

18 வயது நிறைவடைந்த மாணவிகளுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படும், தெலுங்கானா சுதந்திரப் போராட்டத்தில் உயிரிழந்த இளைஞர்கள் தியாகிகளாகக் கருதப்படுவார்கள், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ஓய்வூதியம் ரூ.25 ஆயிரம் போன்ற அறிவிப்புகளும் இதில் அடங்கும். இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்களின் பெற்றோருக்கு மாதம் ரூ.10 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். . தெலங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.