ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், துருக்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஹங்கேரிய வெளியுறவுத்துறை அமைச்சர் பீட்டர் சிஜார்டோ தெரிவித்துள்ளார்…

111
Advertisement

போர் காரணமாக ரஷ்யா மீது பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன.

அதற்கு பதிலடியாக ரஷ்யாவும் பல நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன் ஒருபகுதியாக மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியிலும் கச்சா எண்ணெய் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது.

இந்தநிலையில் தற்போது துருக்கியிடம் இருந்து இயற்கை எரிவாயுவை வாங்க ஹங்கேரி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அசர்பைஜான் நாட்டில் இருந்து வாங்கும் எரிவாயுவை துருக்கி வழியாக கொண்டு செல்ல பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஹங்கேரிய வெளியுறவுத்துறை அமைச்சர் பீட்டர் சிஜார்டோ தெரிவித்தார்.