![](https://sathiyam.tv/wp-content/uploads/2022/08/15-1024x576.jpg)
கோவில்பட்டி அருகே, இருசக்கர வாகனம் வாங்கிய சிறிது நேரத்தில் ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள புதூரை சேர்ந்தவர் வீரசெல்வி. இவர், தனியார் ஷேரூமில் புதிதாக இருசக்கர வாகனம் வாங்கினார். அதில், அவர் புதூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதில் படுகாயமடைந்த வீரசெல்வியை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வீரசெல்வியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.