மடிப்பாக்கம் அருகே, பெண்ணை ஆசிட் ஊற்றி கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது….

108
Advertisement

சென்னை, மடிப்பாக்கம் அடுத்த புழுதிவாக்கம் பகுதியைச்சேர்ந்த ஆனந்த் என்பவரது மனைவி யமுனா, கடந்த 2018 ஆம் ஆண்டு வானுவம்பேட்டையில் உள்ள மருத்துவ பரிசோதனை கூடத்தில் பணிபுரிந்தபோது ராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் கணவர் ஆனந்த், யாமுனாவை கண்டித்துள்ளார். அதைத்தொடர்ந்து, ராஜாவுடன் பழகுவதை யமுனா நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜா, யமுனா மீது ஆசிட் ஊற்றியுள்ளார். இதில் படுகாயமடைந்த யமுனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யமுனா அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் ராஜாவை போலீசார் கைது செய்தனர் இந்த வழக்கு விசாரணை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரித்த நீதிமதி எழிலரசி, குற்றம்சாட்டப்பட்ட