1000 ஆண்டு பழமையான மம்மிகள் கண்டுபிடிப்பு

692
Advertisement

பெரு நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்து பதப்படுத்தப்பட்ட மனித  உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.அங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில்  ஒரு இடத்தில் மம்மி எனப்படும் பதப்படுத்தப்பட்ட 14 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  பெரு நாட்டு பாரம்பரியப்படி இறந்தவர்கள் வேறு ஒரு உலகத்தில் பிறந்து வாழ்க்கையை தொடர்வார்கள் என நம்பப்படுகிறது.இதனால் இறந்தவர்களின் உடலை  தைலங்கள் பூசி கெடாமல்  பாதுகாத்து வைப்பார்கள். அவ்வாறு பதப்படுத்தப்பட்டு களிமண் பானை உள்ளிட்டவற்றுக்குள் வைத்து பூமிக்குள் புதைக்கப்பட்டிருந்த உடல்கள் பல நூறு ஆண்டுகளுக்கு பின் தற்போது வெளியே எடுக்கப்பட்டு வருகின்றன.