“நடுக்கடலில் மிதந்து வந்த தங்க தேர்” 

426
Advertisement

அசானி புயல் காரணமாக ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் விசித்திரமான தேர் ஒன்று கரை ஒதுங்கியது.


ஸ்ரீகாகுளம் அருகே உள்ள சுன்னப்பள்ளி பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்ட நிலையில், அங்கு தங்க தேர் ஒன்று கரை ஒதுங்கியது. இதனை கண்ட பொதுமக்கள் அந்த தேரை கரைக்கு இழுத்து வந்தனர்.

தேரில் கோபுரம் வடியில் தங்க முலாம் பூசப்பட்டு உள்ள நிலையில் மலேசியா, தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து புயலின் காரணமாக அடித்து வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. விசித்திரமான தேரை மீட்ட போலீசார், எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரிக்கின்றனர்.