மக்களே உஷார்..WhatsApp CEO எச்சரிக்கை !!

234
Advertisement

உலக அளவில்  தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் முதன்மையான செயலியாக இருப்பது வாட்ஸ் அப். உலகில் அதிக அளவில் மக்கள் பயன்படுத்தும் செயலியும் வாட்ஸ் அப் தான்.

இந்நிலையில்,வடிக்கைலாயர்களை கவரும் விதம் அவ்வப்போது,புதிய வசதிகளையும் அறிமுகம் செய்வது வழக்கமான ஒன்று.தற்போது  வாட்ஸ்ஆப்  வனத்தின் சிஇஓ கேத்கார்ட் ,வாட்ஸ்ஆப்   பயனாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதில், வாட்ஸ்ஆப் செயலியை பிளே ஸ்டோரில் மட்டும் பதிவிறக்கம்   செய்யும் மாறும்,வாட்ஸ்ஆப் விட அதிக அம்சங்கள் அடங்கிய ‘ஹே வாட்ஸ்ஆப்’ (“Hey WhatsApp”) என்ற போலி செயலி இணையத்தில் கிடைக்கிறது. அதை பயன்படுத்துபவர்களின் போன்களில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகின்றன.

அந்த செயலியை தடுக்க கூகுளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். தங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாராவது அந்த செயலியை பயன்படுத்தினால் எச்சரிக்கவும் என கூறியுள்ளார்.