“எது எப்போது நிகழும், அது நம்மை எப்படி பாதிக்கும் என சரியாக மதிப்பிடவே முடியவில்லை”- பிரதமர் மோடி பேச்சு

255
Advertisement

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் பிரதமர் மோடி பேசியுள்ளதாவது, “கொரோனா காரணமாக உலக நாடுகள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இதைத் தொடர்ந்து வந்துள்ள உக்ரைன் – ரஷ்யா போர் மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய உலகில் எது எப்போது நிகழும், அது நம்மை எப்படி பாதிக்கும் என மதிப்பிடவே  முடியாத நிலையே உள்ளது.

மேலும்,இந்தியா சுயசார்புடன் திகழ்வதன் அவசியத்தை தற்போதுள்ள சர்வதேச சூழல்கள் உணர்த்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இது போன்ற சூழலில் நமது நாடு சுய சார்பு நிலையில் இருப்பது அவசியம். இந்திய தயாரிப்புகளை வாங்கி அவற்றை இந்தியர்கள் ஆதரிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.