உடுமலை மூணாறு சாலையில் குட்டிகளுடன் சுற்றிதிரியும் யானை கூட்டத்தால் போக்குவரத்து பாதிப்புகுள்ளாகி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மூனாறு பகுதிக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்றுவருவது வழக்கம்.
இந்நிலையில் குட்டிகளுடன் சுற்றி திரியும் யானைகள், சாலையின் நடுவே நீண்ட நேரம் நின்று கொள்வதால்.
அவ்வழியே செல்லும் வாகனங்களும், சுற்றுலா பயணிகளும்.
நீண்ட நேரம் நின்று செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் வனபகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் தாங்களாக முன்வந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.
எனவே வனத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல், வனபகுதி சாலைகளில் ரோந்துபணியை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.