டாட்டூ நிபுணர் குத்தி கொலை

262

காஞ்சிபுரம் கீரை மண்டபம் அருகே சரண்சிங் என்பவர் டாட்டூ கடையும், வணிகர் வீதியில் அசைவ உணவகமும் நடத்தி வந்தார்.

இந்நிலையில் சரண்சிங் வீட்டின் அருகே வசித்து வரும் விஷ்னு என்பவருடன் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஷ்ணு மற்றும் விஷ்ணுவின் தாயார் சித்ரா, தம்பி சிவா உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் கத்தரிக்கோல் மற்றும் Screw Driver போன்ற கூர்மையான ஆயுதங்களால் சரண்சிங் மற்றும் அவரது குடும்பத்தினரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த சரண்சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சரண்சிங் உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கி பதிவு செய்த போலீசார், விஷ்ணு, அவரது தாயார் சித்ரா, தம்பி சிவா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.