மத்திய அமைச்சர்களின் ராஜினாமா

286

மத்திய அமைச்சர்கள் இருவர் ராஜினாமா செய்த நிலையில், அவர்களின் இலாக்கா கூடுதல் பொறுப்பாக, மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி, ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களவை எம்.பி பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் மத்திய உருக்குத்துறை அமைச்சர் ராம்சந்திர பிரசாத் சிங் இருவரும் தங்களது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தனர்.

மத்திய அமைச்சர்கள் இருவர் ராஜினாமாவை தொடர்ந்து, அவர்களின் இலாக்கா கூடுதல் பொறுப்பாக, மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி, ஆதித்யா சிந்தியாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு சிறுபான்மையினர் நலத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு உருக்குத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.