பள்ளி செல்லா மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை

341

இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 6 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லா மாணவர்களையும், இடைநின்ற மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

வீடு, வீடாக சென்று கணக்கெடுத்து மாற்றுத்திறனாளிகளை கண்டறிய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் சேர்த்த பின் 3 மாதங்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி அல்லது வீட்டு வழி கல்வியை தொடர ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.