அக்னிபாத் திட்டம் – மறு ஆய்வு செய்ய வேண்டும்

289

அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்; அக்னிபாத் திட்டம், வரும்கால ராணுவ வீரர்களுக்கு எதிரானது என்றும் அவர்களை ஏமாற்றும் திட்டம் என்றும் மேகாலய ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

அக்னிபத் ஒரு தவறான திட்டம். இது ராணுவத்தின் கௌரவத்துக்கே எதிரானது. இது செயல்பாட்டுக்கு வந்தால் ராணுவத்தின் மீதான மதிப்பு குறைந்துவிடும். 4 ஆண்டுகள் பணி முடித்து ஓய்வூதியம் இன்றி வீடு திரும்பும் வீரர்களுக்கு திருமண வரன்கள் அமையாது என்பதால் அக்னிபத் திட்டம் எதிர்கால வீரர்களுக்கு எதிரானது – மேகாலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கருத்து