இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற பாரம்பரிய உணவுத்திருவிழா நடைபெற்றது….

126
Advertisement

மூலிகை குடிநீர்,சிறு தானிய உணவு வகைகளை ருசித்து மகிழ்ந்த பொது மக்கள்…….

பாரம்பரிய உணவு வகைகளை கொண்டு தயார் செய்த உணவு விருந்தினை நீண்ட வரிசையில் நின்று வாங்கி உண்ட பொது மக்கள்………

இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் பாரம்பரிய உணவுத்திருவிழா இன்று நடைபெற்றது. நமது முன்னோர்கள் பயன்படுத்தி தற்போது நாம் மறந்து போன உணவு வகைகள்,நெல் ரகங்கள்,சிறு தானிய உணவு வகைகள்,மூலிகை பொருட்கள்,மூலிகை எண்ணைகள் ஆகியவை இந்த உணவுத்திருவிழாவில் காட்சிபடுத்தப்பட்டது. குறிப்பாக பாரம்பரிய உணவு பொருட்களான தினை,சாமை,குதிரைவாலி,கம்பு,கேழ்வரகு,நாட்டுசாமை,சம்பா கோதுமை,சோளம்,ராகி,பனிவரகு,நாட்டு சாமை,குலசாமை உள்ளிட்ட பாரம்பரிய சிறு தானியங்கள்,மற்றும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கற்றாழை,வேம்பு,செம்பருத்தி உள்ளிட்ட மூகை சோப்பு வகைகள்,பனை ஓலைகளால் செய்யப்பட்ட நகைகள்,மர செக்கு எண்ணைகள்,நாட்டு விதைகள்,இயற்கை காய்கறிகள்,பாரம்பரிய தானியங்களால் செய்யப்பட்ட உணவு வகைகள்,இனிப்புக்கள்,முருக்கு,சீடை,அதிரசம்,ராகி,கோழ்வரகு,சோளம் கஞ்சி ஆகிய உணவு வகைகளை பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கி உண்டு சுவைத்து மகிழ்ந்தனர்.

மேலும் பாரம்பரிய விதைகள்,பொருட்கள்,உணவு பொருட்கள்,இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட காய்கறிகள் ஆகியவற்றினை பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

மேலும் உணவுத்திருவிழாவினை காண வந்த பொது மக்களுக்கு இயற்கை விவசாயிகளின் கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் திணை பழ கேசரி,வாசைன சீரகசம்பா பலா பரியாணி,தூயமல்லி பல கீரை சாதம்,மணிச்சம்பா தயிர் சாதம்,பாரம்பரிய காய்கறி கூட்டு சாதம்,பாரம்பரிய அப்பளம், உள்ளிட்டவைகளை சமைத்து உணவுத்திருவிழாவினை காண வந்த பொது மக்களுக்கு உணவு விருந்து அளித்தனர்.இதனை பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.