சிகிச்சையில் முன்னாள் முதலமைச்சர்

305

லாலு பிரசாத் யாதவின் உடல் நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக பாட்னாவில் இருந்து,  ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பீகார் மாநில முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல்நலக் குறைவால் ஜாமீனில் உள்ளார்.

லாலு பிரசாத் யாதவ், கடந்த சனிக்கிழமை பாட்னாவில் உள்ள வீட்டில் கீழே விழுந்ததில் கால் மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து லாலு பிரசாத் யாதவ் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல் நிலை மேலும் மேசம் அடைந்தது.

லாலு பிரசாத் யாதவின் உடல் நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக பாட்னாவில் இருந்து,  ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக பீகார் முதலமச்சர் நிதீஷ்குமார், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லாலு பிரசாத் யாதவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.