கவலையில் விவசாயிகள்

310

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், கிராமத்தில் வசிக்கும் விவசாய ரத்தினசாமி 40 ஆண்டு காலமாக அப்பகுதியில் குடியிருந்து வருகிறார்.

இந்த இடம் புறம்போக்கு நிலம் என கூறப்படுகிறது.

அந்த நிலத்தில் குடியிருப்போருக்கு 5 ஆண்டுகள் குடியிருந்தால் பட்டா வழங்கலாம் என்று அரசு ஆணை இருப்பதாவும், இவர் 40 ஆண்டு காலமாக குடியிருந்து வரும் நிலையில், தாராபுரம் வட்டாட்சியர் இடத்தை காலி செய்ய சொல்லி வற்புறுத்தி வருவதோடு, இடத்தை இடித்து ஆகவேண்டும் என்று கூறி வருவதாகவும், இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.