பெண் ஒருவர் கார் விபத்தில் இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.அதையடுத்து உறவினர்கள் அனைவரும் இறுதிச்சடங்கு நடைபெறும் இடத்தில் கூடி உள்ளனர்.
முன்னதாக,
பெரு நாட்டில் வசித்துவரும் , ரோசா இசபெல் செஸ்பெடெஸ் கல்லாகா (Rosa Isabel Cespedes Callaca) என்ற பெண் ,கடந்த வரும் சாலைவிபத்து ஒன்றில் படும்காயாம் அடைந்துள்ளார்.இந்த தகவல் அவரின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](https://sathiyam.tv/wp-content/uploads/2022/05/002-2.jpg)
விபத்தில் பேச்சு மூச்சியின்றி இருந்த ரோசாவை இறந்து விட்டதாக முடிவு செய்துவிட்டனர் அவரின் குடும்பத்தினர்.அதையடுத்து அவரின்இறுதி சடங்கு நடைபெறும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி , அந்நாளில் ரோஸாவின் உறவினர்கள் , நண்பர்கள் என அனைவரும் கூடி இருந்தனர்.இறுதி சடங்கு நடைமுறைகள் தொடங்கியது. ஒருகட்டத்தில்,நடைமுறைகள் முடிந்து விட ரோஸாவின் உடல் வைக்கப்பட்டு இருக்கும் சவப்பெட்டியை அவரின் நண்பர்கள் தூக்கி செல்கின்றனர்.
![](https://sathiyam.tv/wp-content/uploads/2022/05/011-2.jpg)
உறவினர்கள் ஒரே சோகத்தில் சூழ்ந்து நிற்க , ரோஸாவின் உடல் வைக்கப்பட்டு இருக்கும் சவப்பெட்டியை மெல்ல மெல்ல அடக்கம் செய்யும் இடத்திற்கு எடுத்து செல்கின்றனர்.ஒரு கட்டத்தில் , பெட்டின் உள்லே ஏதோ சத்தம் கேட்கிறது.
![](https://sathiyam.tv/wp-content/uploads/2022/05/012.jpg)
இதனை கவனிக்கும் நண்பர்கள் தங்கள் தோளில் இருந்து சவப்பெட்டியை கீழே இறக்கு , மேல் மூடியை துறந்து பார்த்துள்ளனர்.ஒரு நிமிடத்தில் அங்கிருந்தவர்கள் இதய துடிப்பு நின்று விடுகிறது.ஆம் , இறந்ததாக நினைத்து , இறுதி சடங்குகள் முடிந்து , குழியில் சவப்பெட்டியை இறக்கும் சில நொடிகளுக்கு முன் , ரோசா இசபெல் கண் விழித்தபடி பார்த்துள்ளார்.ரோசாவை உயிருடன் பார்த்த அவரின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
![](https://sathiyam.tv/wp-content/uploads/2022/05/005-2.jpg)
இது குறித்து,காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.சம்பவஇடத்திற்கு வந்த காவல்துறை , ரோஸாவின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர்.மேலும் சுகாதாரத்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டு , ரோசா மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.