முதல்வரின் ட்விட்டர் கணக்கு முடக்கம் !!

252
Advertisement

உலக அளவில் இணையத்தளமுடக்கம் என்பது அனைத்து இடங்களிலும் உள்ளது.சம்பத்தப்பட்ட அரசு மீதான வெறுப்போ அல்லது குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளோ , என சொல்லிக்கொண்டே போகலாம் .

இந்தியாவை பொறுத்தவரை , இதுவரை பல முக்கிய நபர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலமுதல்வரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வரின் டுவிட்டர் கணக்கை 4 லட்சம் பேர் பின்பற்றுகின்றனர்,இந்நிலையில் CMOfficeUP என்ற அவரின் டுவிட்டர் கணக்கு சுமார் ஒருமணிநேரம் முடக்கப்பட்டது.

அந்த ஒரு மணி நேரத்தில் பல டுவிட்டர் கணக்குகளை டேக் செய்து டுவிட்கள் பதிவிட்டனர் ஹக்கர்கள். இதையடுத்து முதல்வரின் டுவிட்டர் கணக்கை ஹேக் செய்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.