TNPSC, குரூப் 1 தேர்வில் தகுதியான தேர்வர்களுக்கு வரும் 29 ஆம் தேதி கலந்தாய்வு

254

TNPSC , குரூப் 1 தேர்வில் தகுதியான தேர்வர்களுக்கு வரும் 29 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை கலெக்டர், உதவி ஆணையாளர் உள்ளிட்ட 66 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்தநிலையில், குரூப் 1 பதவிக்கான தரவரிசை பட்டியல், TNPSC யின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தகுதியான தேர்வர்கள் அனைவரும் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆணையக்குழு அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.