கேரள உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வி.பாத்தி நியமிக்கப்பட்டு உள்ளார்.

174
Advertisement

கேரள உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.மணிகுமார், வருகின்ற 24 ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார்.

இதனை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வி.பாத்தியை நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனிடையே வருகின்ற ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் கேரள உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வி.பாத்தி பதவியேற்பார் என்பதை மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.