மனைவியை கொத்திய “பாம்பை” மருத்துவமனைக்கு  கொண்டுசென்ற கணவன்

512
Advertisement

பாம்பு யாரையாவது கொத்திவிட்டால் நாம் உடனே அந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்வோம்.ஆனால் இங்கு ஒருவர் தன் மனைவியுடன் , கொத்திய பாம்பை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் பெண் ஒருவரை பாம்பு ஒன்று கொத்தியுள்ளது.அதையடுத்து அந்த பெண்ணின் கணவரான  ராமேந்திர யாதவ் மனைவியை  பதறிஅடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளார் கூடவே அந்த பாம்பை ஒரு பாட்டிலில் போட்டு கொண்டுசென்றுள்ளார்.

அந்த பெண் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதற்கிடையில் கணவர் ராமேந்திர யாதவிடம், ஏன் பாம்பை உடன் கொண்டு வந்தீர்கள் என்று டாக்டர்கள் கேட்டதற்கு, “என்  மனைவியை  எந்த பாம்பு கடித்தது என்று கேட்டால் செய்வது அதனாலதான் , நீங்களே பார்க்க வேண்டும் என்பதற்காக  பாம்பை கொண்டு வந்தேன்” என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யாதவ், தனது மனைவி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு பாம்பை காட்டுப் பகுதியில் விடுவதாக தெரிவித்தார் அதுவரை  பாம்பு சுவாசிக்க பிளாஸ்டிக் பாட்டிலில் துளைகளை துளைத்ததாகவும் கூறியுள்ளார்.