பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமியை மட்டும் சந்தித்து பேசுனார் – ஆர்.பி.உதயகுமார்

255

மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் மட்டுமே பிரதமர் மோடி பேசியதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு போர்வை, உணவு உள்ளிட்டவற்றை ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டினார்.

மதுரை விமான நிலையித்தில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அருகருகே இருந்தாலும், இருவரும் பேசிக்கொள்ளவிலை என்று தெரிவித்தார்.