தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காவல்துறை மறுப்பு

170

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் ஊர்வலமாக செல்ல திட்டமிட்டிருந்தது. இந்த ஊர்வலத்திற்கு அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் காவல்துறையில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம்,வேலூர், திருப்பத்தூர், திருச்சி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.