எடப்பாடி பழனிச்சாமியை, யாராலும் அசைக்க முடியாது – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

260

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, யாராலும் அசைக்க முடியாது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன், எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சிலர் . அ.தி.மு.க-வை அழிக்க நினைப்பதாகவும், அவர்களின் கனவு நிறைவேறாது என தெரிவித்தார்