‘உங்களில் ஒருவன்’ படித்து விட்டு பாராட்டிய ரஜினிகாந்துக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

231
Advertisement

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் சுயசரிதையை புத்தகமாக எழுதியுள்ளார் .இந்த புத்தகம் கடந்த பிப்ரவரி 28ம் தேதி வெளியிடப்பட்டது .

இந்நிலையில் ‘உங்களில் ஒருவன்’ படித்துவிட்டு, நடிகர் ரஜினிகாந்த் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினை தொலைபேசியில் பாராட்டியுள்ளார்இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் .

‘உங்களில் ஒருவன்’ படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி.உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார் .