மாணவர்கள் உயிரை பறித்த கோர விபத்து

278

ஓசூர் அருகே அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் பயணித்த மினி பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் 12 மாணவர்கள் காயமடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பேடப்பள்ளியில் அரசு மாதிரி பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சூளகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயின்று வருவதால், மினி பேருந்து மூலம் தினந்தோறும் மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில் வழக்கம்போல பள்ளிகள் முடிந்து மாணவர்களை ஏற்றி சென்ற மினி பேருந்து சூளகிரியை நோக்கி சென்ற போது தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 12 மாணவர்கள் காயமடைந்தனர்.

காயமடைந்த மாணவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைகாக சூளகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். 3 மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.