ஜூலை 28 செஸ் ஒலிம்பியாட் போட்டி

368

முதன்முறையாக இந்தியாவில், குறிப்பாக சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கோலாகலமாக நடக்க இருக்கிறது.

வரும் 28ம் தேதி தொடங்க உள்ள போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.