பிரேசிலில் கனமழை, நிலச்சரிவில் – 35 பேர் பலி

403

பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடா் கனமழை பெய்து வருகிறது.

இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது வடகிழக்கு பிரேசிலின் பெர்னாம்புகோ மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 28 பேர் உயிரிழந்தனர்.

அலகோவாஸில், ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு பேர் பலியாகினர்.

மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கி உள்ளனர்.

அலகோவாஸில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழை பாதிப்புகள் காரணமாக அவசரநிலைஅறிவிக்கப்பட்டுள்ளது.  

வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புக்குழுவினர், ராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.