தனிமையில் ஆட்டம்போட்ட ” கரடி குட்டி’ உருகும் நெட்டிசன்கள்

275
Advertisement

மனைவி இல்லாத வீட்ல கணவன் எப்படி இருப்பார் ? ஆசிரியர் இல்லாத மாணவர்கள் வகுப்பறையில் எப்படி இருப்பார்கள் ? நண்பர்கள் இல்லாமால் காதலியுடன் தனிமையில் ஒரு காதலன் எப்படி இருந்துருப்பான்? இவை அனைத்தும் அந்தந்த தருணத்தில் பலரையும் மகிழ்ச்சியில் மூழ்கடிக்கும் தருணம்.

ஏன் நீங்கள் கூட இதில் சில தருணங்களை கண்டிப்பாக கடந்து தன் வந்துருப்பீங்க.இவைகளை வைத்துப்பார்த்தால் “தனிமை” சிலருக்கு மகிழ்ச்சியான தருணம் என்பதை உணர்த்துகிறது.இது மனிதனுக்கு மட்டும் அல்ல என்பதை இந்த வீடியோ பாத்து தெரிஞ்சுகொங்கோ.

இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ வைரலாகிட்டு வருது.அதில், காட்டுயில் கரடி குட்டி ஒன்று தனிமைல இருக்கமாதி தெரிகிறது.”அச்சோ… பாவம்” என நாம் நினைக்க,அந்த கரடி குட்டி இடம் கொடுக்கவில்லை.

“யாரும் இங்க இல்ல,நான் மட்டும் தான் இருக்கேன் , யாரும் பாக்கல…” என நினைத்தது போல…. செம ஜோலியா , செம ஹபிய்யா , துள்ளிக்குதித்து டான்ஸ் ஆடி மகிழ்கிறது அந்த கரடி குட்டி.

தனிமையில் காட்டின் நடுவில் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து மகிழ்ச்சியாய் இருக்கும் குட்டி கரடியை பார்த்து நெட்டிசன்களும் உருகி வருகின்றனர்.