அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ரெடியா? 8-வது படிச்சாலே போதும்… குஷியில் இளைஞர்கள்!!!

87
Advertisement

திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதுகுறித்தான, கூடுதல் விவரங்களை இந்த காணொளி தொகுப்பில் பார்க்கலாம் .

மண்ணச்சநல்லூர், அந்தநல்லூர், மருங்காபுரி, முசிறி,  லால்குடி, மணிகண்டம், தொட்டியம், திருவெறும்பூா், துறையூா், உப்புலியபுரம், வையம்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் இந்த காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், உயர் அலுவலர்களுக்கு அடிப்படை பணிகளுக்கு உதவி செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளவேண்டும்.

இதற்கு 15,000- 57,000 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

18 – 32 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இரண்டு ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் விண்ணப்பப் படிவத்தினை tiruchirappalli.nic.in என்ற இணையதளம் அல்லது தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இணையதளம் (National Career Service Portal) www.ncs.gov.in ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும்  இதற்கு அடிப்படை தகுதிகளாக 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.