மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு பள்ளியில் ஜி-20 மாநாடு குறித்து பள்ளிக்குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

76
Advertisement

ஜி20 மாநாடு இந்தியாவில் வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட  தலைவர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர்.

இந்நிலையில், உசிலம்பட்டி வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஜி-20 மாநாடு குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாநாடு குறித்தும் மாநாட்டின் நோக்கம் குறித்தும் பள்ளி தலைமை ஆசிரியர் மதன்பிரபு எடுத்துரைத்தார். முன்னதாக பள்ளி மாணவ-மணவிகள் இணைந்து ஜி20 லோகோவை உருவாக்கி காட்டியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. தமிழகத்திலேயே முதன்முறையாக பள்ளியில் ஜி20 மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது.