எடப்பாடியுடன் இணக்கமாவாரா சசிகலா?

107
Advertisement

வைத்திலிங்கம் இளைய மகன் திருமணம் இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த விழாவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகிய மூவரும் இணைந்து கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சசிகலா நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

சசிகலாவின் கையில் காயம் ஏற்பட்டதால் அவர் கலந்து கொள்ளவில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் கூறுகின்றனர். குணமான பின் வீட்டிற்கே நேரடியாக சென்று மணமக்களை வாழ்வார் என்றும் கூறுகிறார்கள். ஆனால் சசிகலா நிகழ்வில் பங்கேற்காததற்கு வேறு சில காரணங்களை கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

டிடிவி தினகரனுடனான கருத்து வேறுபாடு இன்னும் சரியாகவில்லை. சசிகலா தற்போது தனது சகோதரர் திவாகரன் பக்கம் நிற்பதால் தினகரன் பங்கேற்கும் நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ், அவர்களுடன் இணைந்தால் அரசியல் ரீதியாகவும் தனக்கு பின்னடைவாக இருக்கும் என்று சசிகலா நினைக்கிறாராம். அதிமுக முழுவதும் எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றுவிட்ட நிலையில் ஓபிஎஸ் முழுவதுமாக பலமிழந்து நிற்கிறார். தினகரன் தனிக் கட்சி நடத்தி வருகிறார்.

இப்படியான சூழலில் இவர்கள் பக்கம் நின்றால் பிரயோஜனம் இல்லை.எடப்பாடி பழனிசாமி பக்கம் நிற்பதே அரசியல் எதிர்காலத்துக்கு சரியானதாக இருக்கும் என்று சசிகலா நினைக்கிறாராம்.