“டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன்” – விராட் கோலி அறிவிப்பு

302
Advertisement

டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மற்றும் தலைவர் கங்குலியிடம் கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார். 

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்த டி.20 கேப்டன் பதவியிலருந்து விலகுவதாகவும் விராட் கோலி அறிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக பல்வேறு செய்திகள் இது தொடர்பாக வெளியாகி வந்த நிலையில், தற்போது விராட் கோலி தனது அறிக்கை மூலம் உறுதி செய்துள்ளார்.

டி20 அணிக்கு மட்டும் ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.