அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

308

ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திறகு ஆள் சேர்க்கும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்ப்பு உச்சநீதிமன்றத்தில் டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தால் தேச பாதுகாப்பு மற்றும் ராணுவத்திற்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை  விடுத்துள்ளார்.

இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.