தென்மேற்குப் பருவமழை – அதிகம் பெய்ய வாய்ப்பு

216

கடந்த 29ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்கியது.

வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி பருவமழை தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ளது.

இந்த பருவமழை, நீண்ட கால சராசரியில் 103 விழுக்காடாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எதிர்பார்க்கப்பட்டதைவிட இது அதிகம் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தெற்கு மற்றும் மத்திய இந்திய பகுதிகளில் மழைப்பொழிவு அதிகம் இருக்கும் என்றும், வடகிழக்கு பகுதிகளில் குறைவாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் தென்மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.