பள்ளிகள் திறப்பு குறித்து நாளை அறிவிக்கப்படும்

460

1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து நாளை அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை இன்று முதல் ஜூலை 13ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட இருந்த நிலையில், பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

பள்ளி திறப்பு தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் எந்தெந்த தேதிகளில் நடைபெறும் என்பது பற்றியும் அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் கூறியுள்ளார்.