424 VIP-களுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்க அரசு முடிவு

198

பஞ்சாப்பில் விஐபிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்பப்பெற்ற மறுநாளே காங்கிரசை சேர்ந்த பாடகர் சித்து மூசேவாலா வாகனத்தில் சென்றபோது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவருக்கான பாதுகாப்பைத் திரும்பப்பெற்றதும் அதை வெளிப்படையாக அறிவித்ததுமே கொலைக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், பஞ்சாப்பில் VIP-களுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்க மாநில அரசு முடிவு செய்து உள்ளது.

வரும் 7-ம் தேதி முதல் 434 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.