“ஆவிகள்” தான் தீ வைக்கச்சொன்னது- முதலாளி வீட்டை கொளுத்திய நபர்

328
Advertisement

அமெரிக்காவின் புளோரிடாவில் 54 வயது நபர் ஒருவர் தனது முதலாளியின் வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.பின்பு,அந்த நபர் சிசிடிவி மூலம் அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில், முதலாளியின் வீட்டிற்கு தீ வைத்ததற்கான காரணம் குறித்து விசாரணையில் அவர் சொன்ன பதில்  இணையத்தில் வைரலாகியது.

அவர் கூறுகையில், “என் முதலாளி மீது எந்த கோபமும்  இல்லை, ஆனால் என்னிடம் பேசிய சில ” ஆவிகள்” தான் என் முதலாளியின் புதிய  கனவு வீட்டை எரிக்க கேட்டுக்கொண்டன என தெரிவித்துள்ளார்.

அதிர்ஷ்டவசமாக வீட்டிற்கு தீ வைக்கும்போது,உள்ளே யாரும் இல்லை.மேலும் அருகே இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்ததில் இவர் தான் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டு, அவரை  கைதுசெய்துள்ளனர் அந்நகர காவல்துறை.