நடைபயிற்சி செய்த டிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை

408

காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அம்ரீன் பட் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக  டிக் டாக்கில் பல வீடியோக்களை பதிவு செய்து வந்தார்.

இதனால் அவர் காஷ்மீர் முழுவதும் மிகவும் பிரபலமாக இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை அவர் தனது வீட்டுக்கு முன்பு இருந்த தோட்டத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு தீவிரவாதிகள், அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே அம்ரீன் பட் உயிரிழந்தார்.

துப்பாக்கி சத்தத்தை கேட்டு அங்கு வந்த அவரது சகோதரர் மகன் ஃபர்ஹான் சுபைர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

படுகாயமடைந்த ஃபர்ஹான் சுபைர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்